சனி, 22 ஜனவரி, 2011

வித்யாசாகருக்கு சிறப்பு விருது அறிவிக்கப் பட்டுள்ளது..

அன்புறவுகளுக்கு வணக்கம்,

M.I.E.T கல்வி நிறுவனங்களும், உலக தமிழ் கவிஞர் பேரவையும், தமிழ்த்தாய் அறக் கட்டளை அமைப்பும் சேர்ந்து இரண்டு நாள் மாநாடு நடத்துகிறது. "உலக தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள் இரண்டாவது மாநாடு - 2001" என்று இதற்கு பெயர் சூட்டப் பட்டு, இன்றும் நாளையும் (22.01.2011 ~ 23.01.11) என நடந்துக் கொண்டிருக்கும் இம் மாநாட்டில் நூறு கவிஞர்களுக்கும், நூறு எழுத்தாளர்களுக்கும், நூறு ஆய்வாளர்களுக்கும் என்று விருது வழங்கி சிறப்பிக்க அறிவித்தனர். அதில் திரு. வித்யாசாகருக்கும் சிறப்பு விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

எங்களின் இலக்கிய பயணத்தில் எமக்கு பெரும் உதவியாய் நின்று, எம்மை எப்பொழுதிற்குமாய் வாழ்த்தி மகிழ்ந்து, எம் படைப்புக்களுக்கு முதல் தர இடம் தரும் உங்களுக்கே நன்றிகள் அனைத்தும். உரித்தாகும்.

இது தாயகத்தில் கிடைக்கும் முதல் விருது என்பதாலும், இதை ஒரு கொண்டாட்டமாக எடுத்துக் கொள்ளாமல்; உழைப்பிற்கு கிடைத்த மரியாதையாக மட்டும் எடுத்துக் கொள்ள எண்ணியதாலும், அம்மாவினை விருது பெற அனுப்பி அதற்கான வேண்டுதலையும் "தமிழ்த்தாய் அறக்கட்டளைக்கு" அனுப்பியுள்ளோம். நம்மை வரவேற்று உடன் இருந்து சிறப்பு செய்யும் வண்ணமும், அம்மாவை உடன் இருந்து காத்துக் கொள்ளவும், 'முகநூல் நண்பர்கள் நற்பணி சங்கம்' அமைப்பை சார்ந்தவர்கள் அங்கு வந்து பெருமை செய்கிறார்கள்.

தவிர, ஒரு பணியை செய்பவருக்கு, நீ செய்வது சரி தான் தொடர்ந்து இயங்கு என்று ஊக்குவிக்கும், ஒரு நிறைவாக மட்டுமிதை எடுத்துக் கொண்டு, இறையின் அருளிற்கும் உங்களுக்கும், படைப்பாளிகளை ஊக்குவிக்க இப்பெரும்பணியை செய்யும் தமிழ்த்தாய் அறக் கட்டளை அமைப்பு, உலக தமிழ் கவிஞர் பேரவை, MIET கல்வி நிறுவனங்களுக்கும் கைகூப்பி நன்றிகளை தெரிவிக்கிறோம்!!

பெரு நன்றிகளுடன்..

முகில் பதிப்பகம்

புதன், 6 அக்டோபர், 2010

அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!!


த்தம் கசியாமல்
மரணம் நேராமல்
இல்லாமல் போகாமல் போகும் வெற்றிடமாய்
உணர வைக்கும் காதலின் வசந்தத்தை வலியை
வெற்றிக்கான பரிமாறுதல்களை உள்ளடக்கிய
முழுக்க முழுக்க காதல் சார்ந்த முகில் பதிப்பகத்தின் புதிய வெளியீடு........

லைப்பு: அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!!

சிரியர்: வித்யாசாகர்

படைப்புக்களை, தோழர் இசாக் (97866218777), ஐயா கிரிராஜ் (9600000952) மற்றும் 25942837 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். புத்தகம் மூலம் வரும் தொகை சமூக நற்பணிக்கே பயன் படுத்தப் படுகிறது என்பதையும் பேரன்புடனும் மகிழ்வுடனும் தெரிவிக்கிறோம்.

நன்றிகளுடன்..

முகில் பதிப்பகம்

வியாழன், 2 செப்டம்பர், 2010

"நிலாவின் இந்திய உலா" சென்னையில் புத்தக வெளியீடு!

"அம்மா என்ற வார்த்தைக்கான 'எங்களின் சிறப்பு வரமிவள் திருமதி. கெம்பீஸ்வரியம்மாள் "



"ஒரு உழைப்பின், நம்பிக்கையின், முயற்சியின் வெற்றி இங்கே வெளியீடாய் அரங்கேறுகிறது"



"நட்பை பெருமைபடுத்திய சில நட்புள்ளங்களின் காட்சியிது, இணையத்தால் இணைந்த இதயங்கள்"



"ஒரு படைப்பின் கதை முளைத்த, பாசத்தின் பினைப்பிது 'நிலாவும் அவருடைய அம்மாவும்"



"இந்த ஏக்கத்தின் பார்வையில் பூக்கட்டும் 'இன்னும் பல புத்தகப் பூக்கள்! "


சென்னையில் வெகு விமரிசையாக நடந்தேறியது 'முகில் பதிப்பக வெளியீடான "நிலாவின் இந்தியவுலா" புத்தக வெளியீட்டு விழா.

29.08.2010 அன்று காலை பத்து மணி முப்பது நிமிட நேர அளவில் 'முகில் பதிப்பகம்' சார்பாக திரு. வித்யாசாகரின் தாயார் குத்துவிளக்கேற்றி விழாவினை துவங்கி வைக்க, பெரும் மதிப்பிற்குரிய எழுத்தாளர் பாடலாசிரியர் என எல்லாம் கடந்து இலக்கிய பெரியோர்களாகத் திகழும் திரு. பிறைசூடன், திரு. ஞானி மற்றும் கவிஞர் மற்றும் பாடலாசிரியரான திரு. யுகபாரதி, ஆலயம் அமைப்பினை சேர்ந்த திரு. ராஜவேலு போன்றோர் வாழ்த்தி பேசியதோடு 'நிலாவின் இந்தியவுலா' புத்தகம் குறித்தும், நிலாவின் உழைப்பு, நம்பிக்கை, முயற்சி, நட்பு என அவரின் சிறப்பு பற்றியும் மிக சிறப்பாக அவரவர் பங்கிற்கு எடுத்து பேசினர்.

முகில் பதிப்பகம் சார்பாக வித்யாசாகரின் தாயார் திருமதி கெம்பீஸ்வரியம்மாள் அவர்கள் மூலம் எழுத்தாளர் நிலா அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப் பட்டு, விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழையிலையில் உணவு பரிமாறி 'விழா இனிதே மதியம் 2 மணியளவில் நிறைவுற்றது.

விழாவில் நிலா ஒரு சிறப்பெனில், அவரின் புத்தகம் ஒரு சிறப்பெனில், நண்பர்களே மிக சிறப்பாக அரங்கம் நிறைந்து காணப்பட்டதும், நட்பினால் நெகிழ்ந்த, நடந்த விழா இது என்பதும் மிக குறிப்பிடத் தக்கதுமாகும்.

நிலா என்ற தன் மகளின் முயற்சிக்கும், நம்பிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து, ஈழத்தில் இருந்து லண்டனுக்கும், லண்டனிலிருந்து சென்னைக்குமென பயணித்து நிலாவின் முழு துணையாகவும், அவருக்கு துணையாக நிற்பதொன்றே தன் கடமையாகவும் எண்ணி, பாசத்தினால் பூரித்து நின்ற அந்த 'நிலாவின் தாயாருக்கே, 'இவ்விழாவின் பாராட்டுக்களும் வெற்றியும் சென்றடைவதில் நிலா முழு மகிழ்வு கொள்வார் என்ற நம்பிக்கையை 'இங்கே உலகத்தின் பார்வையில் பதிந்து வைக்கிறேன்!

உலகமெலாம், தமிழ் வாழும் வரை நிலாவின் புகழும், எழுத்தும் நிலைத்தோங்கட்டும்!!

இப்புத்தகத்தினை மிக அழகாகவும் தரமாகவும் அச்சிட்டு தந்த தா. அகிலன் அவர்களுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மிக்க வாழ்த்துக்களோடு..

முகில் பதிப்பகம்

வியாழன், 17 ஜூன், 2010

வித்யாசாகரின் எத்தனையோ பொய்கள்!

அன்புத் தோழர்களுக்கு வணக்கம்




ணையத்தில் இதயம் தாங்கி நட்ப்பின் வானம் தொட்ட தோழமை உறவுகளே. நம் புதிய சிருங் கவிதைகளின் தொகுப்பான "எத்தனையோ பொய்கள்" விற்ப்பனையில் உள்ளது. தமிழ் அலை ஊடகம் மூலமும், முகில் பதிப்பகம் மூலமும், தோழர் இசாக் (97866218777) மற்றும் ஐயா கிரிராஜ் (9600000952) அவர்களை தொடர்பு கொண்டு புத்தகம் பெற்றுக் கொள்ளலாம். புத்தகம் மூலம் வரும் தொகை சமூக நற்பணிக்கே பயன் படுத்தப் படுகிறது என்பதையும் பேரன்புடனும் மகிழ்வுடனும் தெரிவிக்கிறோம்.

நன்றிகளுடன்..

முகில் பதிப்பகம்

வியாழன், 22 ஏப்ரல், 2010

நற்செய்தி! நற்செய்தி!!

தோழர்களுக்கு வணக்கம்,

இணைய பல்கலைகழக பாடத்தில் ஐயா அறிவுமதி, இலக்குமி குமாரன், ஞான திரவியம், என்.டி.ராஜ்குமார், மகுடேஸ்வரன், மாலதி மைத்ரி, சுகிர்தராணி, சல்மா, சுகந்தி சுப்பிரமணியம், குட்டிரேவதி, வெண்ணிலா, உமா மகேஸ்வரி மற்றும் நம் வித்யசாகரை பற்றியும் மிக சிறப்பாக குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள்.

பார்க்க விரும்புபவர்கள் இந்த சுட்டியை சொடுக்கவும்:-
http://tamilvu.org/courses/couindex.htm பின், பாடங்கள் சொடுக்கவும் ~ D0414 புதுமை இலக்கிய வகைமையும் வடிவமும் சொடுக்கவும் ~ D04142 கவிதை மரபும் மாற்றமும் சொடுக்கவும் ~ பாட அமைப்பு சொடுக்கவும் ~ 2.5 தொண்ணூறுகளுக்குப் பின் கவிதைகள் சொடுக்கவும் ~ 2.5.1 மண் சார்ந்த கவிதைகள் முழுதையும் படிக்கவும்.

நன்றிகளுடன்..
முகில் பதிப்பகம்