சென்னையில் வெகு விமரிசையாக நடந்தேறியது 'முகில் பதிப்பக வெளியீடான "நிலாவின் இந்தியவுலா" புத்தக வெளியீட்டு விழா.
29.08.2010 அன்று காலை பத்து மணி முப்பது நிமிட நேர அளவில் 'முகில் பதிப்பகம்' சார்பாக திரு. வித்யாசாகரின் தாயார் குத்துவிளக்கேற்றி விழாவினை துவங்கி வைக்க, பெரும் மதிப்பிற்குரிய எழுத்தாளர் பாடலாசிரியர் என எல்லாம் கடந்து இலக்கிய பெரியோர்களாகத் திகழும் திரு. பிறைசூடன், திரு. ஞானி மற்றும் கவிஞர் மற்றும் பாடலாசிரியரான திரு. யுகபாரதி, ஆலயம் அமைப்பினை சேர்ந்த திரு. ராஜவேலு போன்றோர் வாழ்த்தி பேசியதோடு 'நிலாவின் இந்தியவுலா' புத்தகம் குறித்தும், நிலாவின் உழைப்பு, நம்பிக்கை, முயற்சி, நட்பு என அவரின் சிறப்பு பற்றியும் மிக சிறப்பாக அவரவர் பங்கிற்கு எடுத்து பேசினர்.
முகில் பதிப்பகம் சார்பாக வித்யாசாகரின் தாயார் திருமதி கெம்பீஸ்வரியம்மாள் அவர்கள் மூலம் எழுத்தாளர் நிலா அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப் பட்டு, விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழையிலையில் உணவு பரிமாறி 'விழா இனிதே மதியம் 2 மணியளவில் நிறைவுற்றது.
விழாவில் நிலா ஒரு சிறப்பெனில், அவரின் புத்தகம் ஒரு சிறப்பெனில், நண்பர்களே மிக சிறப்பாக அரங்கம் நிறைந்து காணப்பட்டதும், நட்பினால் நெகிழ்ந்த, நடந்த விழா இது என்பதும் மிக குறிப்பிடத் தக்கதுமாகும்.
நிலா என்ற தன் மகளின் முயற்சிக்கும், நம்பிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து, ஈழத்தில் இருந்து லண்டனுக்கும், லண்டனிலிருந்து சென்னைக்குமென பயணித்து நிலாவின் முழு துணையாகவும், அவருக்கு துணையாக நிற்பதொன்றே தன் கடமையாகவும் எண்ணி, பாசத்தினால் பூரித்து நின்ற அந்த 'நிலாவின் தாயாருக்கே, 'இவ்விழாவின் பாராட்டுக்களும் வெற்றியும் சென்றடைவதில் நிலா முழு மகிழ்வு கொள்வார் என்ற நம்பிக்கையை 'இங்கே உலகத்தின் பார்வையில் பதிந்து வைக்கிறேன்!
உலகமெலாம், தமிழ் வாழும் வரை நிலாவின் புகழும், எழுத்தும் நிலைத்தோங்கட்டும்!!
இப்புத்தகத்தினை மிக அழகாகவும் தரமாகவும் அச்சிட்டு தந்த தா. அகிலன் அவர்களுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மிக்க வாழ்த்துக்களோடு..
முகில் பதிப்பகம்
29.08.2010 அன்று காலை பத்து மணி முப்பது நிமிட நேர அளவில் 'முகில் பதிப்பகம்' சார்பாக திரு. வித்யாசாகரின் தாயார் குத்துவிளக்கேற்றி விழாவினை துவங்கி வைக்க, பெரும் மதிப்பிற்குரிய எழுத்தாளர் பாடலாசிரியர் என எல்லாம் கடந்து இலக்கிய பெரியோர்களாகத் திகழும் திரு. பிறைசூடன், திரு. ஞானி மற்றும் கவிஞர் மற்றும் பாடலாசிரியரான திரு. யுகபாரதி, ஆலயம் அமைப்பினை சேர்ந்த திரு. ராஜவேலு போன்றோர் வாழ்த்தி பேசியதோடு 'நிலாவின் இந்தியவுலா' புத்தகம் குறித்தும், நிலாவின் உழைப்பு, நம்பிக்கை, முயற்சி, நட்பு என அவரின் சிறப்பு பற்றியும் மிக சிறப்பாக அவரவர் பங்கிற்கு எடுத்து பேசினர்.
முகில் பதிப்பகம் சார்பாக வித்யாசாகரின் தாயார் திருமதி கெம்பீஸ்வரியம்மாள் அவர்கள் மூலம் எழுத்தாளர் நிலா அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப் பட்டு, விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழையிலையில் உணவு பரிமாறி 'விழா இனிதே மதியம் 2 மணியளவில் நிறைவுற்றது.
விழாவில் நிலா ஒரு சிறப்பெனில், அவரின் புத்தகம் ஒரு சிறப்பெனில், நண்பர்களே மிக சிறப்பாக அரங்கம் நிறைந்து காணப்பட்டதும், நட்பினால் நெகிழ்ந்த, நடந்த விழா இது என்பதும் மிக குறிப்பிடத் தக்கதுமாகும்.
நிலா என்ற தன் மகளின் முயற்சிக்கும், நம்பிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து, ஈழத்தில் இருந்து லண்டனுக்கும், லண்டனிலிருந்து சென்னைக்குமென பயணித்து நிலாவின் முழு துணையாகவும், அவருக்கு துணையாக நிற்பதொன்றே தன் கடமையாகவும் எண்ணி, பாசத்தினால் பூரித்து நின்ற அந்த 'நிலாவின் தாயாருக்கே, 'இவ்விழாவின் பாராட்டுக்களும் வெற்றியும் சென்றடைவதில் நிலா முழு மகிழ்வு கொள்வார் என்ற நம்பிக்கையை 'இங்கே உலகத்தின் பார்வையில் பதிந்து வைக்கிறேன்!
உலகமெலாம், தமிழ் வாழும் வரை நிலாவின் புகழும், எழுத்தும் நிலைத்தோங்கட்டும்!!
இப்புத்தகத்தினை மிக அழகாகவும் தரமாகவும் அச்சிட்டு தந்த தா. அகிலன் அவர்களுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மிக்க வாழ்த்துக்களோடு..
முகில் பதிப்பகம்
புத்தக வெளியீடுக்கும்...புத்தக வெளியீட்டு விழாவினை பதிவு செய்தமைக்கும்...
பதிலளிநீக்குநன்றி முகில் பதிப்பகம்,
நன்றி வித்யாசாகர்,
மிக்க நன்றி நண்பரே!!
பதிலளிநீக்குதொடரட்டும் தங்களின் தமிழ் பணி
பதிலளிநீக்குமிக்க நன்றி தமிழ்த்தோட்டம்!
பதிலளிநீக்குதொடரட்டும் உங்கள் தமிழ் பணி
பதிலளிநீக்கு