வித்யாசாகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வித்யாசாகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 அக்டோபர், 2010

அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!!


த்தம் கசியாமல்
மரணம் நேராமல்
இல்லாமல் போகாமல் போகும் வெற்றிடமாய்
உணர வைக்கும் காதலின் வசந்தத்தை வலியை
வெற்றிக்கான பரிமாறுதல்களை உள்ளடக்கிய
முழுக்க முழுக்க காதல் சார்ந்த முகில் பதிப்பகத்தின் புதிய வெளியீடு........

லைப்பு: அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!!

சிரியர்: வித்யாசாகர்

படைப்புக்களை, தோழர் இசாக் (97866218777), ஐயா கிரிராஜ் (9600000952) மற்றும் 25942837 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். புத்தகம் மூலம் வரும் தொகை சமூக நற்பணிக்கே பயன் படுத்தப் படுகிறது என்பதையும் பேரன்புடனும் மகிழ்வுடனும் தெரிவிக்கிறோம்.

நன்றிகளுடன்..

முகில் பதிப்பகம்

வியாழன், 2 செப்டம்பர், 2010

"நிலாவின் இந்திய உலா" சென்னையில் புத்தக வெளியீடு!

"அம்மா என்ற வார்த்தைக்கான 'எங்களின் சிறப்பு வரமிவள் திருமதி. கெம்பீஸ்வரியம்மாள் "



"ஒரு உழைப்பின், நம்பிக்கையின், முயற்சியின் வெற்றி இங்கே வெளியீடாய் அரங்கேறுகிறது"



"நட்பை பெருமைபடுத்திய சில நட்புள்ளங்களின் காட்சியிது, இணையத்தால் இணைந்த இதயங்கள்"



"ஒரு படைப்பின் கதை முளைத்த, பாசத்தின் பினைப்பிது 'நிலாவும் அவருடைய அம்மாவும்"



"இந்த ஏக்கத்தின் பார்வையில் பூக்கட்டும் 'இன்னும் பல புத்தகப் பூக்கள்! "


சென்னையில் வெகு விமரிசையாக நடந்தேறியது 'முகில் பதிப்பக வெளியீடான "நிலாவின் இந்தியவுலா" புத்தக வெளியீட்டு விழா.

29.08.2010 அன்று காலை பத்து மணி முப்பது நிமிட நேர அளவில் 'முகில் பதிப்பகம்' சார்பாக திரு. வித்யாசாகரின் தாயார் குத்துவிளக்கேற்றி விழாவினை துவங்கி வைக்க, பெரும் மதிப்பிற்குரிய எழுத்தாளர் பாடலாசிரியர் என எல்லாம் கடந்து இலக்கிய பெரியோர்களாகத் திகழும் திரு. பிறைசூடன், திரு. ஞானி மற்றும் கவிஞர் மற்றும் பாடலாசிரியரான திரு. யுகபாரதி, ஆலயம் அமைப்பினை சேர்ந்த திரு. ராஜவேலு போன்றோர் வாழ்த்தி பேசியதோடு 'நிலாவின் இந்தியவுலா' புத்தகம் குறித்தும், நிலாவின் உழைப்பு, நம்பிக்கை, முயற்சி, நட்பு என அவரின் சிறப்பு பற்றியும் மிக சிறப்பாக அவரவர் பங்கிற்கு எடுத்து பேசினர்.

முகில் பதிப்பகம் சார்பாக வித்யாசாகரின் தாயார் திருமதி கெம்பீஸ்வரியம்மாள் அவர்கள் மூலம் எழுத்தாளர் நிலா அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப் பட்டு, விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழையிலையில் உணவு பரிமாறி 'விழா இனிதே மதியம் 2 மணியளவில் நிறைவுற்றது.

விழாவில் நிலா ஒரு சிறப்பெனில், அவரின் புத்தகம் ஒரு சிறப்பெனில், நண்பர்களே மிக சிறப்பாக அரங்கம் நிறைந்து காணப்பட்டதும், நட்பினால் நெகிழ்ந்த, நடந்த விழா இது என்பதும் மிக குறிப்பிடத் தக்கதுமாகும்.

நிலா என்ற தன் மகளின் முயற்சிக்கும், நம்பிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து, ஈழத்தில் இருந்து லண்டனுக்கும், லண்டனிலிருந்து சென்னைக்குமென பயணித்து நிலாவின் முழு துணையாகவும், அவருக்கு துணையாக நிற்பதொன்றே தன் கடமையாகவும் எண்ணி, பாசத்தினால் பூரித்து நின்ற அந்த 'நிலாவின் தாயாருக்கே, 'இவ்விழாவின் பாராட்டுக்களும் வெற்றியும் சென்றடைவதில் நிலா முழு மகிழ்வு கொள்வார் என்ற நம்பிக்கையை 'இங்கே உலகத்தின் பார்வையில் பதிந்து வைக்கிறேன்!

உலகமெலாம், தமிழ் வாழும் வரை நிலாவின் புகழும், எழுத்தும் நிலைத்தோங்கட்டும்!!

இப்புத்தகத்தினை மிக அழகாகவும் தரமாகவும் அச்சிட்டு தந்த தா. அகிலன் அவர்களுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மிக்க வாழ்த்துக்களோடு..

முகில் பதிப்பகம்